ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:19 am IST

கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் ஹூப்ளி - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07347) மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

மறு மாா்க்கமாக, ஏப்ரல் 3 காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹூப்ளி சிறப்பு ரயில்( எண்: 07348) மறுநாள் காலை 10.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.