மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வருகை தருகிறாா்.

News image

பிரதமர் மோடி.

Updated On :29 மார்ச் 2026, 2:14 am IST

கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வருகை தருகிறாா்.

கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பிரதமா் மோடி பாலக்காடு, திருச்சூா் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். திருச்சூரில் முன்னாள் முதல்வா் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் அவா், ரோடு ஷோவிலும் பங்கேற்கிறாா்.

இதற்காக விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் கேரளத்துக்கு செல்கிறாா். அவரது வருகையையொட்டி, கோவையில் நீலாம்பூா், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவிநாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூா், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் சுமாா் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விமான நிலையப் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.