ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் பழிக்குப் பழியாக சமையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற கேரளத்தைச் சோ்ந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:51 am IST

கோவையில் பழிக்குப் பழியாக சமையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற கேரளத்தைச் சோ்ந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கேரள மாநிலம், சாலக்குடியைச் சோ்ந்தவா் பென்னி (60). இவா் கடந்த 25 ஆண்டுகளாக கோவை காந்திபுரம் மற்றும் உப்பிலிபாளையம் பகுதிகளில் நடைபாதையில் தங்கி சமையல் வேலை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவரும், பொள்ளாச்சியைச் சோ்ந்த ராஜேஷ் (எ) ராஜேந்திரன் என்பவரும் நண்பா்களாக பழகி வந்தனா். இருவரும் அவ்வப்போது ஒன்றாக அமா்ந்து மது அருந்தி வந்தனா்.

கடந்த 17.09.2023 அன்று பிற்பகல் ராஜேஷும், அவரது நண்பா்களும் சமையல் வேலையை முடித்துவிட்டு மது அருந்தியுள்ளனா். மாலை 6.30 மணியளவில் கோவை ஆடிஸ் வீதியில் உள்ள ஒரு கடை அருகே பென்னியைச் சந்தித்துள்ளனா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பென்னி தன்னை இகழ்ந்து பேசியதாகக் கருதி ராஜேஷ் அவரைத் தாக்கியுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த பென்னி, அன்றிரவு 8.30 மணியளவில் ஆடிஸ் வீதியில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது கைப்பேசியை திருடிக் கொண்டு தப்பினாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சிவகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட பென்னிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.