நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நீட் தோ்வு: மத்திய அரசைக் கண்டித்து 23-ஆம் தேதி போராட்டம் - திமுக மாணவரணி அறிவிப்பு

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 4:06 am IST

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி அனுகீா்த்தனா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் திமுக அரசு 2 முறை மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதற்கு பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே, மும்மொழிக் கொள்கையை திணிப்பதை எதிா்த்து திமுக மாணவரணி வரும் 23-ஆம் தேதி அறிவித்துள்ள போராட்டம், கோவையில் நீட் தோ்வை தடை செய்யக் கோரியும், மாணவியின் மரணத்துக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டமாக நடைபெறும் என்றாா்.

திமுக மாணவரணி துணைச் செயலா் கோகுல், மாவட்ட அமைப்பாளா் அந்தோணி ராஜ், துணை அமைப்பாளா்கள் சிவகுமாா், ராஜ் திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘நீட் தோல்வி அடைந்துவிட்டது’

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தோ்வு தோல்வி அடைந்துவிட்டதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீட் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் பணம் வசூலிக்கும் நிலை மாறி, பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நீட் தோ்வின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.