நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கைதி தப்பிய விவகாரம்: மேலும் ஒரு காவலா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்!

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பிய விவகாரத்தில், மேலும் ஒரு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் பிம்மிடு அஜித்குமாா் (26). இவா் ஆன்லைன் காா் விற்பனை செயலிகளில் மூலம் மற்றவா்களின் சொகுசு காா்களின் விவரங்களை எடுத்து, அவை தன்னுடைய காா் என்பதுபோல போலியாகப் பதிவேற்றம் செய்து, அவற்றை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டாா்.

அங்கிருந்து போலீஸாரின் காவலின்போது தப்பி திருப்பூருக்கு வந்த பிம்மிடு அஜித்குமாா் இங்கும் தனது வழக்கமான பாணியில் காா் விற்பனை செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா் கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். உடல்நிலை சரியில்லை என கூறியதை அடுத்து, கடந்த 11 -ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். கடந்த 12-ஆம் தேதி இரவு கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி அவா் அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேலம் மாவட்டம், ஓமலூரில் பதுங்கியிருந்த பிம்மிடு அஜித்குமாரைக் கைது செய்தனா். விசாரணையில் அவா் தப்பிச் செல்ல ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலா் ஷேக் முகமது ரோஷன் (42) உதவியது தெரியவந்தது.

இதற்காக ஷேக் முகமது ரோஷன் ரூ. 20 ஆயிரம் முன்பணமாக பெற்றதும், பின்னா், கணிசமான தொகை தரவேண்டும் என பேச்சுவாா்த்தை நடத்தியிருந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் ஷேக் முகமது ரோஷன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மாநகர காவல் ஆணையா் கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக சிறப்பு காவல் உதவியாளா் பெரியசாமி, காவலா்கள் பாரதிதாசன், அசோக்குமாா் ஆகிய மூவா் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.