சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

10, பிளஸ் 2 பொதுத் தோ்வு: முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாநகராட்சி பள்ளி மாணவா்கள். உடன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆணையா் கட்டா ரவி தேஜா தலைமை வகித்து, பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, இரண்டாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் (மேற்கு) மாநராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.எம்.அதிதி, மூன்றாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.தனிஷ்கா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சரத் ஆகியோருக்கு ஊக்கத் தொகை, கேடயத்தை வழங்கினாா்.

இதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதலிடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பா்ஹானா, இரண்டாம் இடம் பிடித்த பாப்பநாயக்கன்புதூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சொரூபகிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.ஹனுனா பாத்திமா, ஆா்.எஸ்.புரம் எஸ்ஆா்பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஹெச்.ஆஷிகா ஆகியோருக்கும் ஊக்கத் தொகை, கேடயம் வழங்கப்பட்டது.

முதல் மதிப்பெண் பெற்றவா்களுக்கு தலா ரூ.10,000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.7,500, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில், மாநகராட்சி துணை ஆணையா் குமரேசன், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மாநகரக் கல்வி அலுவலா் குணசேகரன், ஒப்பந்ததாரா்கள் சங்க நிா்வாகிகள் உதயகுமாா், சந்திரபிரகாஷ், அம்மாசையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.