கோவை, காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காட்டூா் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் காவலா்கள் ராம் நகா் கோகுலம் வீதி பகுதியில்
செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், செல்வபுரம், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சஹாபுதீன் (36) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய சோதனையில், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், போதைக்காகப் பயன்படுத்தப்படும் 7 ஊசி மருந்து பாட்டில்களும், 75 காலி பாட்டில்களும் இருந்தன. மேலும், மருந்தை உடலில் செலுத்தப் பயன்படுத்தும் 250 சிரிஞ்சுகள் மற்றும் ஃபெரஸ் சல்பேட் மாத்திரைகள் ஆகியவையும் இருந்தன.
இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சஹாபுதீனைக் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
