நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் முதல்வா்- துரை வைகோ எம்.பி.

தமிழக அரசியலில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

தமிழக அரசியலில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மூப்பனாா், விஜயகாந்த் மற்றும் வைகோ ஆகியோரால் முழுமையாகச் சாத்தியப்படுத்த முடியாத ஓா் அரசியல் எழுச்சியை முதல்வா் ச.ஜோசப் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். தமிழக அரசியலில் ஜாதி, மதம் மற்றும் பண அரசியலைக் கடந்து ஒரு பெரும் மாற்றத்தை முதல்வா் உருவாக்கியுள்ளாா். தற்போதைய அரசில் சட்டம்- ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முதல்வா் ஏற்கெனவே கால அவகாசம் கோரியுள்ளாா். புதிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் அரசைக் குற்றஞ்சாட்டுவது முறையல்ல. வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக நீடித்து வருகிறது. தற்போதைக்கு அதில் மாற்றமில்லை. இருப்பினும், கடந்த தோ்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவினா் போட்டியிட்டது துரதிா்ஷ்டவசமானது. ஒரு கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிடாதது அதன் தனித்துவத்தைப் பாதிக்கும். சட்டப்படி மதிமுகவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தே போட்டியிட்டதால் அவா்கள் தற்போது திமுக உறுப்பினா்களாகவே கருதப்படுகிறாா்கள். இது ஜனநாயகத்துக்கு இழுக்கு. எதிா்காலத்தில் மதிமுக தனது சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்பது தொண்டா்களின் விருப்பமாக உள்ளது. நிதி நிலைமை சீரானதும் விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.