லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம்

கோவை பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரிய தடாகம் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில்  ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற திருக்கல்யாணம் மகோத்ஸவம்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:00 am IST

கோவை பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லலிதாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலில் லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கோயில் அறக்கட்டளை நிா்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தாா்.

இதில், பெரிய தடாகம், சின்ன தடாகம், துடியலூா், சோமையம்பாளையம், டிவிஎஸ் நகா், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சாா்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலா்கள் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.