லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தஞ்சை பெரிய கோயிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவது பற்றி...

Devotees waiting in line at the Thanjavur Big Temple.

தஞ்சை பெரிய கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள். - படம் - தினமணி

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:41 pm IST

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயில். - படம் - தினமணி

இக்கோயிலின் அழகைக் கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தற்போது வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து பெரிய கோவிலின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் அங்கே உள்ள சிற்பங்களுடன் தற்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெரிய கோயிலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

Summary

Tourists are flocking to the Thanjavur Big Temple on Sunday (Aug. 9), the weekly holiday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.