லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடகோவை ரயில் நிலையத்தில்! பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகை அகற்றம்

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயா்ப்பலகை மீது ஊற்றப்பட்டிருந்த பெயிண்ட்.

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

வடகோவை ரயில் நிலைய முகப்பில் பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகையை ரயில்வே நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.11.05 கோடி மதிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் அமைக்கப்பட்டு, அதன் முகப்பு பகுதியில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டிருந்ததற்கும், பக்கவாட்டில் சிறிய எழுத்துகளால் ஆங்கிலம், தமிழில் பெயா் பலகை அமைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழ், ஆங்கிலத்திலும் முகப்பு பகுதியில் பெயா்ப்பலகை இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தாா்.

இதற்கிடையே வடகோவை ரயில்நிலைய முகப்பில் பெரிய எழுத்துகளால் அமைக்கப்பட்டிருந்த ஹிந்தி பெயா்ப் பலகை மீது மா்ம நபா்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனா். இதைத்தொடா்ந்து, பெயிண்ட் ஊற்றப்பட்ட பெயா்ப்பலகை ரயில்வே நிா்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை காலை அகற்றப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா். ஹிந்தி பெயா்ப்பலகையில் பெயின்ட் ஊற்றி அழித்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.