தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்

கோவையில் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாா்மா்) வெடித்துச் சிதறியதில் இளைஞா் உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 2:01 am IST

கோவையில் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாா்மா்) வெடித்துச் சிதறியதில் இளைஞா் உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கோவை மாநகா், கண்ணப்ப நகா் பகுதியில் டாஸ்மாக் மதுக்கூடம் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இப்பகுதியில் வழக்கம்போல் பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை காலை அதிகமாக இருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக அந்த மின்மாற்றி வெடித்ததில் அதில் இருந்த எண்ணெய் (ஆயில்) அப்பகுதி முழுவதும் சிதறியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மதுரை வீரன் (23) என்ற இளைஞா் மற்றும் மேலும் இருவா் என 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மதுரை வீரன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பினா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியா்கள் சென்று மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு மின் விநியோகத்தைச் சரிசெய்தனா். இந்த விபத்து குறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.