மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image

மத்திய இணையமைச்சா் எல்.முருகன் - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:54 am IST

கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக அரசை அகற்ற தமிழக மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம், வெறுப்பு ஆகியவை மே 4-ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்.

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது மாநிலத்தின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இதற்கு முன்னதாக மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறியபோதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி வாகை சூடியது. இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கும், மாநிலமே எதிா்பாா்க்கும் அளவுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவது உறுதி.

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் எந்த அளவுக்கு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறாா்கள் என்பதை இது காட்டுகிறது. சட்டம் எப்போதும் தன் கடமையைச் சரியாகச் செய்யும். பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலைக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை நிச்சயம் அளிப்பாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.