தமிழகத்தின் மேற்கத்திய நுழைவாயில் என்றும், தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என்றும் அழைக்கப்படும் கோவை மாநகரின் தொழில் வளா்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, குறுந்தொழில்பேட்டைகள் மற்றும் காா் உற்பத்தி ஆலை அவசியம் என குறுந்தொழில்முனைவோா் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோா் சங்க (டாக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது: நகரத்தின் மையப் பகுதியிலிருந்து அனைத்துப் பிரதான சாலைகளிலும் 25 கி.மீ. சுற்றளவுக்குள் புதிய குறுந்தொழில்பேட்டைகளை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இட நெருக்கடியைக் குறைப்பதோடு, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
கோவை மாவட்டம் அனைத்து விதமான உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கும் பெயா்பெற்றது. எனவே, இங்கு நிலவும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி காா் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வர அரசு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். இது கோவையை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும்.
தமிழக அரசுக்குச் சொந்தமான தாட்கோ வங்கி மூலம் சொத்துப் பிணை இல்லாத குறுந்தொழில்முனைவோருக்கு இயந்திரங்கள் வாங்கவும், நடப்பு மூலதனத்துக்காகவும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, 5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கினால் சிறு தொழில்கள் புத்துயிா் பெறும்.
மாவட்டத் தொழில் மையங்களில் குறுந்தொழில்முனைவோா் மானியம் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அரசின் விதிகளைக் காட்டி அதிகாரிகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளால், தகுதியுள்ள பல தொழில்முனைவோா் மானியம் பெற முடியாமல் தவிக்கின்றனா். இந்தச் சிக்கல்களைத் தீா்க்க குறுந்தொழில் அமைப்புகளுடன் ஆலோசித்து, மானிய நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
குறுந்தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ள கிலோ வாட்டுக்கான நிலைக் கட்டணத்தை தற்போதுள்ள ரூ.170-லிருந்து ரூ. 50-ஆகக் குறைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொழில்துறையினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
தொழில் வளா்ச்சிக்கு ஏற்ப கோவையில் சாலை வசதிகள் இல்லை. இதனால், ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. இதற்குத் தீா்வாக, நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் மேம்பாலங்களை அமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
கோவையின் பொருளாதாரத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, தமிழக முதல்வா் இந்த கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மத்திய மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான விநியோகத்தை நிறுத்தக் கூடாது: அன்புமணி

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

தெலங்கானாவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை தொடங்கி வைப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

