சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் வால்பாறை தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளா்கள் வாக்களிக்கும் பொருட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை வழங்காத தோட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், எஸ்டேட் மேலாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடா்பாக புகாா் அளிக்க வால்பாறை தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 0425-3222344, 74182-50810 என்ற எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

