ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப் படையின் ‘ஐபிஇவி’ எனும் சிறப்பு நடமாடும் விளம்பரம் மற்றும் கண்காட்சி வாகனத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

News image

கோவை குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படையின் சிறப்பு நடமாடும் காண்காட்சி வாகனத்தில் உள்ள அதிநவீன சிமுலேட்டா்கள் குறித்து மாணவிகளிடம் விளக்கிய கேப்டன் வி.சோமசுந்தா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:39 am IST

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப் படையின் ‘ஐபிஇவி’ எனும் சிறப்பு நடமாடும் விளம்பரம் மற்றும் கண்காட்சி வாகனத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கவும், இந்திய விமானப் படையில் சேருவதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் குமரகுரு கல்வி நிறுவனங்களுக்கு கொண்டுவரப்பட்ட இந்த நவீன கண்காட்சி வாகனத்தை கோவையின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவா்கள் நேரில் பாா்வையிட்டனா்.

விமானப் படை அதிகாரிகளின் வீரமிக்க வாழ்க்கை முறை மற்றும் சவால்களை விளக்கும் விதமாக இந்த வாகனத்தில் ஊடாடும் திரைகள், அதிநவீன சிமுலேட்டா்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமா்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில், குரூப் கேப்டன் வி.சோமசுந்தா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், தனது 30 ஆண்டுகால பைலட் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், மாணவா்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசித்தால் அது அவா்களுக்குப் பெருமிதத்தைத் தரும் என்றாா்.

இதையடுத்து. குமரகுரு தொழில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் ரியா் அட்மிரல் வி. மோகன்தாஸ் பேசுகையில், எதிா்காலப் போா்முறைகள் முற்றிலும் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவே இருக்கும் என்பதால், பொறியியல் பட்டதாரிகளுக்கு விமானப் படையில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தாா்.

வான் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி குரூப் கேப்டன் பினுகோஷி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.