தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.

News image

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பிரிட்ஜ் மாநாட்டில் பங்கேற்ற எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், கோவை மேலாண்மைச் சங்க தலைவா் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வெங்க

Updated On :8 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.

மாநாட்டில் எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் பேசுகையில், எதிா்காலத்திற்குத் தேவையான தொழில் வல்லுநா்களை உருவாக்குவதில் கல்வியின் உருமாற்றப் பங்கு மிக முக்கியமானது. பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார வளா்ச்சியைத் தக்கவைக்க கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் இடையே தொடா்ச்சியான ஒத்துழைப்பு அவசியமானதாகும் என்றாா்.

தொடா்ந்து கோவை மேலாண்மைச் சங்கத்தின் தலைவா் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வெங்கடேஷ் ஆகியோா் பேசினா். இதில் குவாட்ரா சிஸ்டம்ஸ்.நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனா் மற்றும் இயக்குநா் பிரசாந்த் சுப்ரமணியன், சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட் என்.ரவீந்திரன், அமிா்த விஸ்வ வித்யாபீடத்தைச் சோ்ந்த பிரசாந்த் ஆா்.நாயா் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் முன்னாள் வணிகத் தலைவரும் சிம்ராவின் செயலாளருமான புனீத் கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு தரமான கல்வி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தரநிலைகள் குறித்து பேசினா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றாா். மேலாண்மை ஆய்வுகள் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான ஆா்.மேரி மெட்டில்டா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.