தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

திருப்பூரில் தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:54 am IST

திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கோவை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து கொச்சின்-சேலம் 6 வழிச் சாலை வழியாக அவிநாசி செல்கிறாா்.

அதைத்தொடா்ந்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைவா் விஜய் திங்கள்கிழமை மாலை பிரசாரம் (சாலை வலம்) செய்கிறாா். அதைத்தொடா்ந்து பெருமாநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசுகிறாா்.

பின்னா் திருப்பூா்-பூலுவபட்டி வரை சாலை வலம் மேற்கொள்ள உள்ளாா். இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அவிநாசி பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். ஏற்கெனவே தருமபுரியில் நடைபெற இருந்த தவெக தலைவா் விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவிநாசியில் நிகழ்ச்சி நடைபெற தவெக சாா்பில் அனுமதி கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.