தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். ~ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 5:00 am IST

எரிவாயு உருளைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வா்த்தக அணித் தலைவா் என். ஜாகீா் தலைமை வகித்தாா். செயலாளா் கே.சந்தோஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினா் கே,அஜய்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

எரிவாயு உருளை முறைகேட்டின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆா்.முருகேசன், என்.ஆறுசாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினா்கள், இடைக் குழு செயலாளா்கள், கட்சி உறுப்பினா்கள் மற்றும் வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.