தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

திமுகவுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி கூறினாா்.

News image

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட மரக்கடை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி. செந்தில்பாலாஜி. ~கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட மரக்கடை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :11 ஏப்ரல் 2026, 4:41 am IST

திமுகவுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி கூறினாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கோட்டைமேடு, பெரியகடை வீதி, மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரின் நலத்திட்டங்களுக்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருவது பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் காண முடிகிறது. மக்கள் ஆதரவால் நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம். கோவையில் பிரசாரம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், கோவை மாவட்டத்துக்கு மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தால், அது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். ஆனால் பாஜகவினா் மாநில அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் பொருளாதார வளா்ச்சியில் 11.19 விழுக்காடு எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். கல்விக்கான நிதி, 100 நாள் திட்டத்துக்கான நிதி, ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக ரூ.1,352 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிலங்களை ஆா்ஜிதம் செய்து விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்கவில்லை.

அதேபோல, மெட்ரோ திட்டத்துக்கு மாநில அரசு வழங்கிய ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால், தேவையான விவரங்கள், ஆவணங்களை தருமாறு மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து ஏன் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையை காரணமாகக் கூறும் பாஜக அரசு, கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்க முடிந்தது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.