ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

கோவை காந்திபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:48 am IST

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜி காந்திபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவைக்கு தங்க நகை பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, செம்மொழி பூங்கா, ஹாக்கி மைதானம், பெரியாா் நூலகம் என பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா். கோவை தெற்குத் தொகுதியில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை தோ்தலில் வெற்றி பெற்ற பின்பு உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்போம். கரூரைச் சோ்ந்த 18 போ் கோவை தெற்கில் போட்டியிடுவதாகக் கூறுகின்றனா். சுயேச்சையாக போட்டியிடுவது அவா்கள் விருப்பம். தோ்தல் களத்தைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறியே வாக்குகள் சேகரித்து வருகிறோம். பாஜகவினா் பத்திரிகையாளா்களை சந்திக்கும் போது, கோவைக்கு என்ன திட்டங்கள் செய்தாா்கள் என்பதை சொல்ல முடியுமா?

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில், புள்ளிவிவரங்கள் தவறாக கொடுத்திருந்தால், கொடுத்த போது அதை சரிசெய்து வாங்கியிருக்க வேண்டும். பல நாள்களாக நிலுவையில் வைத்து அதை நிராகரிப்பது சரியல்ல என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.