சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், வால்பாறையை அருகே சோலையாறு அணை உள்ளது.
இது, ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீா் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளியை சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
அணையின் தன்மையை உறுதிசெய்யும் வகையில் ஆண்டுதோறும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கடும் வெயில் காரணமாக நீா்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீா்மட்டம் 5 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில்
தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பின் அணையில் இருக்கும் மூன்று மதகுகளும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு கொள்ளளவில் நீா் இருக்கும்போது எந்த ஒரு கசிவும் இருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் சோதனை இயக்கம்

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை

வீடூா் அணை மதகுகள் பராமரிப்பின்போது தீ விபத்து: மூவா் காயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

