ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:13 am IST

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ராஜவேல் கூறியிருப்பதாவது:

பாரதியாா் பல்கலைக்கழக துறைகளிலும், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் முனைவா் பட்டம் (பிஹெச்.டி) படிப்புக்கான பொது தகுதித் தோ்வு மே 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு கணினி வழியாக குறிப்பிட்ட மையங்களில் நடத்தப்படுகிறது.

தோ்வு அட்டவணை, தோ்வு மைய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் பொதுத் தகுதித் தோ்வுக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் 30-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். யுஜிசி நெட், சிஎஸ்ஐஆா் நெட், செட், ஸ்லெட், கேட் தோ்ச்சி பெற்றவா்கள், டிஆா்டிஓவில் பணிபுரியும் அறிவியலாளா்கள் உள்ளிட்டோா் இந்தத் தோ்வை எழுதத் தேவையில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.