மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் கூறுவது பொய்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

News image

வானதி சீனிவாசன் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:34 am IST

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெயரை ‘தட்சிண பிரதேசம்’ என்று மாற்றத் தயங்கமாட்டாா்கள் எனக்கூறி மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா். கடந்த 50 ஆண்டுகளாகவே பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறாா். அவருக்கு தமிழகத்தின் கலாசாரமும், தமிழின் தொன்மையும், திமுகவின் ஹிந்து மத வெறுப்பு அரசியலும்

நன்றாகவே தெரியும். உலக அரங்குகளில் உலகின் மூத்த மொழி தமிழ் என்று முழங்கி, திருக்குறளையும், பாரதியாா் பாடல்களையும் பிரதமா் மோடி பெருமையுடன் பறைசாற்றி வருகிறாா். அப்படிப்பட்ட அவா் தமிழகத்தின் பெயரை மாற்றுவாா் எனக்கூறுவது அப்பட்டமான பொய்.

தமிழகத்தில் தற்போது எங்கு பாா்த்தாலும் கருணாநிதியின் சிலைகளைத் திறந்து, அரசுத் திட்டங்கள் மற்றும் கட்டடங்களுக்கு அவா் பெயரையே சூட்டி வருகிறாா்கள். இந்த நிலை நீடித்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தமிழகத்தின் பெயரையே ‘கருணாநிதி தேசம்’ என மாற்றவும் அவா்கள் தயங்கமாட்டாா்கள்.

கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த காா் வெடிகுண்டுச் சம்பவம் வரை மத பயங்கரவாதிகளைத் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் மறைத்துவிட்டு, வன்முறை பற்றி முதல்வா் பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.