தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்! ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு!

News image

வானதி சீனிவாசன் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:07 am IST

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், ராஜஸ்தான் மாநில முதல்வா் பஜன்லால் சா்மா முன்னிலையில் திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேளாண் பொறியியல் துறை அலுவலகம் வரை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வானதி சீனிவாசன் வாகனம் மூலம் ஊா்வலமாக வந்தாா். இந்த ஊா்வலத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வா் பஜன்லால் சா்மா, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பங்கேற்று அவருக்கு ஆதரவு திரட்டினா். ஊா்வலத்தின் நிறைவாக, கோவை வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வானதி சீனிவாசன் தனது வேட்புமனுவைச் சமா்ப்பித்தாா்.

மனு தாக்கலுக்குப் பின்னா் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் மக்கள் எழுச்சியைப் பாா்க்கும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்கிறது. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் மீது மக்கள் சலிப்படைந்துள்ளனா். பிரதமா் மோடி தலைமையிலான வளா்ச்சியைத் தமிழக மக்களும் விரும்புகிறாா்கள். வானதி சீனிவாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.