தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாளை வாக்கு எண்ணிக்கை: தடாகம் சாலை பகுதிகள் சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:59 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோவை தடாகம் சாலை சுற்றுப் பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மே 4- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் ஏற்கெனவே மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், கோயில்மேடு, வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, பி.என்.புதூா் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மே 2- ஆம் தேதி மாலை 5 மணி முதல் மே 5- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வானூா்திகளை பறக்கவிடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.