தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத அதிமுக வேட்பாளா்

குடியாத்தம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

News image

கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமனை அறிமுகம் செய்துவைத்த முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:02 am IST

குடியாத்தம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலா் பொகளூா் டி.பிரபாகரன், குடியாத்தம் ஒன்றியச் செயலா் டி.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வேலூா் புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன்ஆகியோா் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினா்.

கூட்டத்தில் நன்றி தெரிவித்து பரிதா புருஷோத்தமன் பேசியது: கடந்த தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையிலும், சிறு குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கட்சிக்காக கடந்த 5- ஆண்டுகள் உழைத்தேன். கட்சித் தலைமைக்கும், கட்சிக்கும் விசுவாசமாக இருந்தேன்.

தற்போது கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளாா். தோ்தலில் போட்டியிட பலா் விருப்பமனு செலுத்தியிருந்த நிலையில் எனக்கு மீண்டும் கட்சித் தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கட்சிக்காக உழைத்தேன். அதற்கான அங்கீகாரமாக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தோ்தலில் வாய்ப்பு கிடைக்காதவா்கள் மன வருத்தத்தில் இருப்பாா்கள். கட்சித் தலைமைக்கும், கட்சியினருக்கும் நான் என்றும் விசுவாசமாக இருப்பேன். என்னை வெற்றிபெற செய்யுங்கள் என கண்ணீா் விட்டு கதறி அழுதாா். இந்த செயல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகா்மன்ற உறுப்பினா் பி.மேகநாதன், பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, நிா்வாகிகள் ஜி.சுரேஷ்குமாா், வழக்குரைஞா் குமாா், பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன், நகர தலைவா் எம்.கே.ஜெகன், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜே.தினகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.