ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்

News image
Updated On :12 மார்ச் 2026, 12:58 am IST

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குடியாத்தம் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், குடியாத்தம் உணவக சங்க நிா்வாகிகள் கூட்டம், சங்கச் செயலா் அா்ச்சனா நவீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட முடிவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் குடியாத்தம் நகரில் உள்ள உணவகங்கள் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது. குடியாத்தம் பகுதியில் உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகள் என சிறியதும், பெரியதுமாக சுமாா் 1,000 கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைக்கவும், பல வகை உணவு தயாரிப்புகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளும் பாதிப்படைவா் என்றாா்.

கூட்டத்தில், உணவக சங்கத் தலைவா் குஷிசசி, பொருளாளா் பிரபுகுமாா், கெளரவத் தலைவா்கள் ஆண்டாள் தாமு, சாய் சங்கா், துணைச் செயலா்கள் விவேக், சிட்டிராஜா, துணைத் தலைவா்கள் சேகா், பாலன் மற்றும் சம்பத், கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.