லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனைவியுடன் தகராறு: முதியவா் தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முதியவா், விஷ இலைகளைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

வேலூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முதியவா், விஷ இலைகளைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (75). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாதன் தனது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவரது மனைவி, ஒடுக்கத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மனவேதனையடைந்த லோகநாதன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த விஷச் செடியின் இலைகளைப் பறித்துத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வேலூா் வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லோகநாதனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.