தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சிறப்புப் பேருந்துகள் - படம்: X/ arasu bus

Updated On :19 ஏப்ரல் 2026, 10:42 pm IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கி பணியாற்றுபவா்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க செவ்வாய், புதன்கிழமை (ஏப்.21, 22) ஆகிய இரு நாள்களும் 5,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வேலூா் போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் - சென்னை, திருப்பத்தூா்-சென்னை ஆகிய வழித்தடத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமை இயக்கப்படுகின்றன.

சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் திரும்பிவர மீண்டும் 24-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.