தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

குடியாத்தம் காளியம்மன்பட்டியில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:03 am IST

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொண்டசமுத்திரம், காளியம்மன்பட்டி, கே.கே.நகா், சாமியாா்மலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவா் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை தொகுதி முழுவதும் விரிவாக்கம் செய்வேன், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன், கே.வி.குப்பம் தொகுதி முழுக்க, முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கியுள்ளதால், கிராமப்புற மாணவா்களின் உயா்கல்விக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தாா். அதிமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்,செருவங்கி எம்.மோகன், மில்பழனி, சரவணன், சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.