ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு: அதிமுக வேட்பாளா்

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு

News image

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமனுக்கு வாக்கு சேகரித்த தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:24 am IST

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையை சீரமைப்பேன் என அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன் உறுதியளித்தாா்.

குடியாத்தம் நகரில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பொதுமக்களிடையே பேசியது. வட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, ரூ.47- கோடியில் புதியகட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்துக்கு ஏற்றாா்போல், மருத்துவா், செவிலியா், தொழில்நுட்புநா்கள், இதர பணியாளா்கள் பணியிடங்களை ஏற்படுத்தாமல், பழைய மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்களே புதிய மருத்துவமனையில் பணியில் உள்ளனா்.

இதனால் தீவிர சிகிச்சைக்காக முன்புபோல், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகிறாா்கள். நான் வெற்றிபெற்றால், மாவட்ட அரசு மருத்துவமனையை சீரமைப்பேன்.

அதேபோல், பொதுமக்கள் பங்களிப்பு செலுத்தி பல ஆண்டுகளாகியும் தரம் உயா்த்தப்படாமல் உள்ள பிச்சனூா் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்துவேன் என உறுதி அளித்தாா். உழவா் சந்தை அருகே வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவா், நகராட்சிக்குட்பட்ட 18, 9, 10, 17, 16, 11, 5- ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, தமாகா மாநில செயற்குழு உறுப்பினா்கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர அவைத் தலைவா் ஆா்.கே.அன்பு,மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகா்மன்ற துணைத்தலைவா் பூங்கொடி மூா்த்தி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.ஐ.அன்வா்பாஷா, வி.என்.தனஞ்செயன்,இ.நித்யானந்தம், வி.இ.கருணா, எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.சிவகுமாா், கோல்டு குமரன்,வி.என்.அண்ணாமலை, ஜி.தேவராஜ், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜே.தினகரன், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன், பாமக நகரச் செயலா் குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.