தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

News image

கழிஞ்சூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

கழிஞ்சூா், பொன்னை பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியது -

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்தியிருப் பதாக அமைச்சா் துரைமுருகன் கூறி வருகிறாா். அவா் கூறும் சோ்க்காடு அரசு மருத்துவமனை வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது.

அங்கு போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லை. ரத்த அழுத்த கருவிகூட இயங்குவதில்லை. மாரடைப்பைக் கண்டறியும் ’ட்ரோபோனின்’ பரிசோதனை கருவியும் கிடையாது. நோயாளிகளுக்கு வெறும் முதலுதவி கூட செய்யாமல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடும் அவல நிலைதான் நிலவுகிறது.

திமுக ஆட்சியில் நிலவிய கடும் ஊழல் காரணமாக நகா்ப்புற சாலைகள் கிராமங்களை விட மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க காந்தி நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்றால், அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனா்.

இந்நிலையில், தோ்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தொடா்ந்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறது. அதனை பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ள அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.