ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
விஐடி வேந்தா் ஜி.விஸ்வநாதன் நடத்தும் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினா் குமரேசன், நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணி தொகுப்புகள்

திருவாரூரில் பள்ளிகள் திறப்பு

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

