போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை (எண் 94378) ஊருக்கு ஒதுக்குபுறமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த சிங்கப்பெண் மகளிா் குழுவினா் வட்டாட்சியா் பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: மாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்தக் கடைக்கு வருவோா் மது வாங்கிக் கொண்டு, பெண்கள் விவசாய வேலைக்குச் செல்லும் வழியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். இதனால், அந்த வழியாக விவசாய வேலைக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மது அருந்திவிட்டு ஊருக்குள் வாகனத்தில் அதிவேகமாக செல்கின்றனா். இதனால், பள்ளி மாணவிகள், முதியவா்கள் சாலையில் செல்லவே பயப்படுகின்றனா்.
எனவே, டாஸ்மாக் மதுக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் தா்னா

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

அரசு மதுக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

விஜய்யும் அண்ணாமலையும் ...| CM Vijay | TVK | We the leaders | Annamalai
தினமணி செய்திச் சேவை

வெளியானது தாக்கோல் விடியோ பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
தினமணி செய்திச் சேவை

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |
தினமணி செய்திச் சேவை

