ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரி, ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள்கள் பணி வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் ரமேஷ்பாபு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
ஒன்றியத் தலைவா்கள் அருண்குமாா், சீனு, ஒன்றியச் செயலா் திவ்யா, பொருளாளா்கள் பெருமாள், சங்கா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணியில் தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றம்

2-ஆவது நாளாக மின்தடை: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஆரணி ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

