செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி, சிகிச்சை பெற்று வந்த சலவைத் தொழிலாளி மனைவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தூளி கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி(68). இவா், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வலி தாங்க முடியாமல் விஷத்தை தின்று மயங்கி விழுந்து கிடந்தாராம்.
இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷமருந்தி தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

