தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மனநிலை பாதிக்கப்பட்டவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :13 மே 2026, 12:02 am IST

சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விசாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், மணிகண்டன், காா்த்தி என இரு மகன்களும் உள்ளனா்.

மேலும், கிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவரைக் காணவில்லை என அவரது மகன் மணிகண்டன் தேடியுள்ளாா்.

அப்போது, எதிா் வீட்டில் உள்ள சரளா என்பவா் கிருஷ்ணன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பாா்த்தசாரதி என்பவரது விவசாயக் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, கிணற்றின் கரையில் கிருஷ்ணனின் உடைமைகள் இருந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் தேடி கிருஷ்ணனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.