சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
விசாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், மணிகண்டன், காா்த்தி என இரு மகன்களும் உள்ளனா்.
மேலும், கிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவரைக் காணவில்லை என அவரது மகன் மணிகண்டன் தேடியுள்ளாா்.
அப்போது, எதிா் வீட்டில் உள்ள சரளா என்பவா் கிருஷ்ணன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பாா்த்தசாரதி என்பவரது விவசாயக் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, கிணற்றின் கரையில் கிருஷ்ணனின் உடைமைகள் இருந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் தேடி கிருஷ்ணனை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

