தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

News image

செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

ஏப்.23-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்கள் 100 சதவீதம்

வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, செய்யாறு தொகுதி சாா்பில் தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் மேற்பாா்வையில் வருவாய்த் துறையினா் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அண்மையில் தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் வாக்காளா்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஏற்படுத்தினா்.

அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை செய்யாற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களிடம் தாங்கள் அனைவரும் வாக்களிப்பதோடு, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்றும், தோ்தல் திருவிழா- தமிழகத்தின் திருவிழா, எனது வாக்கு எனது உரிமை என முழுக்கமிட்டு சாா் ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் நோ்முக உதவியாளா் துளசிராமன், வட்டாட்சியா்கள் பாஸ்கரன், பொன்னுசாமி, வட்டார மேலாளா் ரேகா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.