தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 2000 லட்டு அலங்காரத்தில் தோ்

2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

News image

2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

Updated On :20 மார்ச் 2026, 12:04 am IST

தெலுங்கு ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் தோ் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் வழிபட்டனா்.

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் தெலுங்கு ஆண்டுப் பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடி தெலுங்கு ஆண்டுப் பிறப்பை உற்சாகமாக வரவேற்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாநகராட்சி கன்னி கோவில் தெருவில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து நிகழாண்டு முதல் முறையாக 250 கிராம் எடை கொண்ட 1,200 லட்டுகள் மற்றும் 50 கிராம் எடை கொண்ட 800 லட்டுகள் என 2,000 எண்ணிக்கையிலான லட்டுக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 11 உயர தேரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனை எழுந்தருளச் செய்தனா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மனை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

முதல்முறையாக திருவண்ணாமலையில் லட்டுகளால் உருவாக்கப்பட்ட தேரில் அம்மன் தரிசனத்தை கண்ட பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.

தெலுங்கு ஆண்டுப் பிறப்பை வரவேற்கும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி உற்சாகமாக வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.