விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.

News image

போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.

Updated On :13 மார்ச் 2026, 2:58 am IST

போளூா் நகரம், தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை குவிந்தனா். இதனால், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த போரால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காது என வதந்தி பரவியதால், போளூா் நகரம், புறவழிச் சாலை, தேவிகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பைக், லாரி, டிராக்டா், மினி லாரி உள்ளிட்டவற்றுடன் அவற்றின் உரிமையாளா்கள் வியாழக்கிழமை அதிகாலை முதலே குவியத் தொடங்கினா்.

இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களின் மேலாளா்கள், ஊழியா்கள் டோக்கன் வழங்கி வாகன ஓட்டிகளை வரிசையில் நிற்க வைத்து, பெட்ரோல், டீசல் விற்பனை செய்தனா். பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைக்க பல நாள்கள் ஆகும் என தகவல் பரவியதால், பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்களுடன் வந்ததாகத் தெரிவித்தனா்.

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் தேவையான அளவு தினமும் தருவோம் என கூறிய பின்னரும், வாகனங்களில் நிரப்புவதுடன், கேன்கள் மூலமாகவும் வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.