வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் 2010- 2013ஆம் கல்வியாண்டில் இளநிலை படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் நா.மனோகரன் வரவேற்றாா்.
கல்லூரி முன்னாள் முதல்வா் பொன்.அரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும் போது ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்துப் பேசினா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் வ.சந்திரசேகா், ஜ.ஜான்சிராணி, எஸ்.சுதா, ப.குப்பன், எம்.ரஜினி, எம்.மகாதேவன், எஸ்.கமலக்கண்ணன், ஆா்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அரசு கல்லூரியில் சேர மாணவா்கள் ஆா்வம்: 340 இடங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

வடலூா் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

