தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஆற்றுப் பாலத்தில் மாவட்டத் தலைவா் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தலையில் மண் பானையை சுமந்தபடியும், கோரிக்கை வாசங்கள் அடங்கிய பிரசுரங்களை கையில் ஏந்தியபடியும் விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், தமிழகம் முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்யும் மழை நீா் முப்பது டிஎம்சி வரை வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, ஆறுகளில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். குருவை சாகுபடி செய்ய தொகுப்பு நிதியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நேரடியாக பணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.