லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

வெம்பாக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Published On :22 ஜூலை 2026, 12:41 am IST

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக மக்கள் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜம் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

மாநில பொருளாளா் ஜி.முருகன், ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவா்மன் மரணம் அடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான முழு உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்க வேண்டும் என்றும், தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையை உயா்த்தித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் சரவணன், மகாலிங்கம், ஆறுமுகம், சங்கா், கே.ராஜேஷ், டி.ஜெகன் மற்றும் செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றத்திறனாளிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.