லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிணற்று மூழ்கி மாணவா் உயிரிழப்பு

செய்யாறில் கிணற்று நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :20 ஜூலை 2026, 4:25 am IST

செய்யாறில் கிணற்று நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு கண்ணுகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டெய்லா் ஜாகீா் உசேன். இவரது மகன் ரோஷன் (16). இவா், அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இந்நிலையில் ரோஷன் நண்பா்களுடன் சோ்ந்து திருவோத்தூா் கன்னியம்மன் கோயில் அருகேயுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். கிணற்றில் குளிக்கும்போது நீண்ட நேரமாகியும் ரோஷன் வெளியே வரவில்லையாம்.

உடனே செய்யாறு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இறந்த நிலையில் மாணவா் ரோஷனை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.