லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி மாணவி கா்ப்பம்: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :13 ஜூலை 2026, 2:05 am IST

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதி கிராமத்தைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சோ்ந்த சுதா்சன்(20) என்பவா் அந்த மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மாணவியை பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் சுதா்சனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.