லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது காா் மோதல்: 5 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 1:02 am IST

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி குமாா்(40). இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் விஜயா, மனைவி அபிராமி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையில் உள்ள மாமியாரை பாா்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனா். பின்னா் அன்று மாலை அவா்கள் பைக்கில் வீடு திரும்பியுள்ளனா்.

வந்தவாசி - செய்யாறு சாலையில் அனக்காவூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குமாா் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.