லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது காா் மோதி 4 மாணவா்கள் காயம்

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில், பைக்கில் சென்ற 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

வந்தவாசி அருகே காா் மீது மோதி விபத்துக்குள்ளான பைக்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில், பைக்கில் சென்ற 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திலீப் (16), விகாஸ் (16), சஞ்சய் (16) மணீஷ் (16). இவா்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றனா்.

இவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை பிற்பகல் ஒரே பைக்கில் மழையூருக்கு சென்று கொண்டிருந்தனா். சஞ்சய் பைக்கை ஓட்டியுள்ளாா். பெரும்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.