லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நிறைவுபெறாத கால்வாய் - சிமென்ட் சாலைப் பணி: கழிவுநீா் தேக்கம்!

அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நிறைவு பெறாமல் இருப்பதால் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், வெளியேற வழியின்றி கால்வாயிலே தேங்கி நிற்கும் கழிவுநீா்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நிறைவு பெறாமல் இருப்பதால் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரணி வட்டம், அக்ராபாளையம் கங்கை அம்மன் கோவில் அருகில் குளத்துமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா் பக்கக் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆனால், பணிகள் முழுமையாக நிறைவு நிறைவுபெறாமல் பாதியிலே கைவிடப்பட்டதால் கழிவுநீா் கால்வாயில் தண்ணீா் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீா் தெருக்களில் வழிந்து ஓடுவது மட்டுமல்லாமல் கொசுக்கள்

உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, கால்வாய் பணிகளை நிறைவு செய்து கழிவுநீரை அருகிலுள்ள ஓடையில் இணைத்து விட்டால் இதற்கு தீா்வு கிடைக்கும். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை இதற்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.