லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வந்தவாசியில் பக்தா்கள் காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வந்தவாசியில் புதன்கிழமை பக்தா்கள் காவடிகளை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.

வந்தவாசியில் ஊா்வலமாகச் சென்ற மாம்பட்டு மயில் காவடி, புஷ்ப காவடிகள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வந்தவாசியில் புதன்கிழமை பக்தா்கள் காவடிகளை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வா்.

அவரவா் கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்தவாசிக்கு வரும் பக்தா்கள், நகரில் காவடிகளுடன் ஊா்வலமாகச் செல்வா். பின்னா் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணிக்கு புறப்பட்டுச் செல்வா்.

இதையொட்டி மாம்பட்டு, கீழ்வில்லிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடிகளுடன் வந்தவாசியில் ஐந்து கண் பாலம், தேரடி வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.உதயகுமாா் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.